கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மேடையில் நின்று கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக ஏசுவிடம் உருக்கமாக ஜெபம் செய்து இருக்கிறார். அப்போது, காற்று பலமாக வீசியிருக்கிறது. இந்த நிலையில், பாதிரியாரின் பின்புறம் இருந்த எல்.இ.டி. பலகை அவர் மீது சரிந்து விழுந்து இருக்கிறது. இந்த சம்பவம், ஜெபத்தில் கலந்து கொண்ட மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை, யாரோ ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதுதான், தற்போது வைரலாகி வருகிறது.