எங்கள் புனித இடங்கள் இதயமற்ற முறையில் சுரண்டப்படுகிறது..! மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல் கோவில்களுக்கும் சுதந்திரம் வேண்டும் – நடிகை கஸ்தூரி..!

எங்கள் புனித இடங்கள் இதயமற்ற முறையில் சுரண்டப்படுகிறது..! மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல் கோவில்களுக்கும் சுதந்திரம் வேண்டும் – நடிகை கஸ்தூரி..!

Share it if you like it

கோயில்களைக் கொள்ளையடித்த காங்கிரஸ் மற்றும் முகல் படையெடுப்பாளர்களிடையே அதிக வித்தியாசமோ அல்லது கிழக்கிந்திய கம்பெனி மற்றும் சோனியாவின் காங்கிரசுக்கு இடையே அதிக வித்தியாசமோ இல்லை என்பதில் எனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை. இந்துக்கள் மீது காங்கிரஸின் வெறுப்பு தனித்துவமானது என்று பா.ஜ.க மூத்தலைவர் சம்பிட் பத்ரா அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

பத்ரா தெரிவித்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அவர்களும் தனது கருத்தை இவ்வாறு கூறி இருந்தார்.

தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் 8000- க்கும் மேற்பட்ட கோயில்கள் காணாமல் போயுள்ளது என்று பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி அவர்களும் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களின் (FreeTNTemples) கருத்தை வலியுறுத்தும் வண்ணம் தனது டுவிட்டர் பக்கதில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

நானும் யாத்திரை சென்று இருக்கிறேன், எங்கள் புனித இடங்கள் இதயமற்ற முறையில் சுரண்டுவதற்காக என் இதயம் இரத்தம் கசியும். மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே கோவில்களுக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
சத்குரு குரல் கொடுத்து உள்ளார். நம் நம்பிக்கையை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it