மாவட்ட ஊராட்சி தலைவி, கவுன்சிலருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: தி.மு.க. நிர்வாகிக்கு கணவர் டோஸ்!

மாவட்ட ஊராட்சி தலைவி, கவுன்சிலருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: தி.மு.க. நிர்வாகிக்கு கணவர் டோஸ்!

Share it if you like it

பெண் கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவி ஆகியோருக்கு, தி.மு.க. நிர்வாகி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதிலுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவியின் கணவர், அந்த தி.மு.க. நிர்வாகியின்காலை வெட்டுவேன் என்று மிரட்டி இருக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஜெகதீஷ். இவர், தென்காசி மாவட்ட ஊராட்சியின் தலைவராக இருக்கும் தமிழ்ச்செல்வி மற்றும் கவுன்சிலராக இருக்கும் கனிமொழி உள்ளிட்ட பலருக்கும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, ஜெகதீஷின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட தமிழ்செல்விவியின் கணவர் போஸ், லெஃப்ட் அண்டு ரைட் வாங்குகிறார். இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் போஸ், “ஹலோ ஜெகதீசனா? நான் போஸ் பேசுறேன். என்ன ஊரான் பொண்டாட்டி பூரா பேத்துக்கும், உதடு நல்லா இருக்கு, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்குன்னு மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்கியாம். என்ன விவரம், எனக்கு ஒண்ணும் புரியல. ஏதோ எதேச்சியமா நடந்திருக்கும்னு உன்கிட்ட கேட்காம இருந்தேன். மாவட்ட கவுன்சிலர் கனிமொழிக்கு நீ எதுவும் மெசேஜ் அனுப்பலியோ. சரி, என் வூட்டுக்காரம்மா செல்போனுக்கு என்ன அனுப்பின” என்று கேட்கிறார். உண்மை வெளிப்பட்டு விட்டதால், பயத்தில் பம்மியபடியே பேசும் ஜெகதீஷ், தப்பா எதுவும் அனுப்பவில்லை என்கிறார்.

உடனே போஸ், நீ என் வூட்டம்மாவுக்கு உங்க உதடு அழகாக இருக்குன்னு மெசேஜ் அனுப்புனியா இல்லையா என்று கேட்க, ஜெகதீஷ் ஏதோ பேச முயற்சிக்க, கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லணும். வேற மாதிரி பேசுனா வேற மாதிரி ஆகிப்போயிரும். நீங்கள்லாம் நம்ம ஜாதிக்காரப் பயலுக, நல்லா பாத்துகுவாங்கன்னு நம்பித்தான என் வூட்டம்மாவ அனுப்புறேன். அப்புடி இருக்கும்போது, என் வூட்டம்மாவ அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி மாதிரி பாத்துக்குறதில்லையா. உனக்கு ஏதாச்சும் நா கொறை வச்சிருக்கேனா? டொனேஷன் கேட்டாக்கூட தர்றனா இல்லையா?

நீ என் பொண்டாட்டிக்கு போன் போட்டு உதடு நல்லா இருக்குன்னு சொன்னது மாதிரி, நான் உன் பொண்டாட்டிக்கு போன் போட்டு, உதடு நல்லா இருக்குன்னு சொன்னா எப்புடி இருக்கும். இத நான் மாவட்டச் செயலாளர்கிட்ட கூட சொல்லலை. தெரிஞ்சும் தெரியாம இருந்தேன். ஏன் தெரியுமா? நம்ம ஜாதிக்காரப் பய, ஏதோ அபிலாசையில பண்ணிட்டான்னு. நீ இதே வேலையை கனிமொழிக்கிட்டயும் செஞ்சா என்ன அர்த்தம். நீ எல்லாம் மாவட்டச் செயலாளர் கார்ல ஏறி சுத்திக்கிட்டு திரியுறது கட்சிக்கு கெட்டபெயர். இனிமே நீ மாவட்டச் செயலாளர் கார்ல ஏற்றதை நான் பார்த்தேன், உன் காலை கண்டிப்பாக வெட்டிப்புடுவேன்” என்று மிரட்டுகிறார்.

இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், யோக்கியன் வர்றான் செம்பை எடுத்து உள்ள வைங்கிற கதையா, மத்த கட்சியில் நடக்கிற பாலியல் விவகாரங்களை பற்றி தி.மு.க.வினர் விமர்சித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it