தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி – அமைச்சர் எல்.முருகன் !

தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி – அமைச்சர் எல்.முருகன் !

Share it if you like it

தங்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் வகையில் அதிக ஆற்றலுடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அமைச்சர் எல்.முருகன். இதுதொடர்பாக அவர் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின், அன்பான வார்த்தைகளுக்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அன்புக்குரிய தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெறாவிட்டாலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனை மாநில எல்லைகளை கடந்து ஹிந்தி பேசும் மாநிலத்தில் இருந்து, தங்கள் அன்பு மற்றும் நம்பிக்கையுடன் இரண்டாம் முறையாக ராஜ்யசபா உறுப்பினராக்கி, மத்திய அமைச்சர் பொறுப்பளித்த தங்களுக்கு மிகுந்த மரியாதையும் நன்றியும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

சமூகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு உணர்வுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கான உங்களின் தொலைநோக்குப் பார்வை கடினமாக உழைக்கவும், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கவும் என்னைத் தூண்டுகிறது.

தங்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் வகையில் அதிக ஆற்றலுடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி

என் மீது வைத்த நம்பிக்கைக்கும், வழங்கிய வாய்ப்பிற்கும் அன்பார்ந்த நன்றிகள்..!


Share it if you like it