ஒரு மட்டன் பிரியாணி, காளான் சில்லி, அப்புறம்… அதிகாரியை காக்கா பிடிக்க ஆர்டர் செய்த ஆர்.ஐ.!

ஒரு மட்டன் பிரியாணி, காளான் சில்லி, அப்புறம்… அதிகாரியை காக்கா பிடிக்க ஆர்டர் செய்த ஆர்.ஐ.!

Share it if you like it

தாராபுரத்தில் பொதுமக்களை கால் கடுக்க நிக்க வைத்துவிட்டு, மேலதிகாரிக்கு மட்டன் பிரியாணியும், காளான் சில்லியும் ஆர்டர் செய்த பெண் ஆர்.ஐ.யின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெற்கு ஆர்.ஐ.யாக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவரது அலுவலகத்துக்கு யாரோ ஒரு உயர் அதிகாரி விசிட் வருவார்போல் தெரிகிறது. எனவே, அந்த உயர் அதிகாரியை காக்கா பிடிப்பதற்காக, தாராபுரத்திலுள்ள பிரபலமான அசைவ ஹோட்டலுக்கு தனது உதவியாளரை அனுப்பிய ஆர்.ஐ. தனலட்சுமி, மட்டன் பிரியாணி, காளான் சில்லி, ஒயிட் ரைஸ், கோலா உருண்டை, மட்டன் குழம்பு என வகைவகையாக ஆர்டர் செய்கிறார். அப்போது, அவரது அருகில் மனுவுடன் ஒருவர் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஆர்.ஐ. தனலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…


Share it if you like it