சத்தமே இல்லாமல் ஒரே நாளில் சாதித்துக்காட்டிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன். 14.03.2024 நேற்று காலை சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்த அஸ்வத்தாமன் ‘உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்வதற்கான கோரிக்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் விரைவு வண்டி நின்று செல்வதற்கான கோரிக்கை’, என இரண்டு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்தார். இரண்டு கோரிக்கைகளும் ஒரே நாளில் நரேந்திர மோடி அரசின் ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களால் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. சத்தமே இல்லாமல் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்த அஸ்வத்தாமன் அவர்களுக்கு இரண்டு மாவட்ட மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.