விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா ஏமாப்பூர் அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளரான முத்துக்குமார், அதிமுக கரை வேட்டியை கழற்றி, பாஜக கரை வேட்டியை கட்டி பாஜகவில் தனது ஆதரவாளர்கள் உடன் இணைந்தார்.
அதிமுக துணைச் செயலாளரான முத்துக்குமார் அதிமுகவின் செயல்பாடுகள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலையின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறி அதிமுகவின் கரை வேட்டியை அவிழ்த்து எறிந்துவிட்டு பாஜகவின் கரை வேட்டியை அணிந்து மோடி வாழ்க என்று கோஷமிட்டுள்ளார். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வினால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.