உடைந்த “இண்டி” கூட்டணி : உறுதியாக உருவெடுக்கும் பாஜக !

உடைந்த “இண்டி” கூட்டணி : உறுதியாக உருவெடுக்கும் பாஜக !

Share it if you like it

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் மாநிலத்திலுள்ள பிரதானக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

எனினும், இக்கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதாகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

இதேபோலவே, பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழகத்திலோ சனாதனம் பற்றி தி.மு.க. விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கு வேறு மாதிரியாக தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மேற்கவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மானும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.


Share it if you like it