ஐயப்ப பக்தர்களை ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்திய கொடூரம் – அண்ணாமலை கடும் கண்டனம் !

ஐயப்ப பக்தர்களை ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்திய கொடூரம் – அண்ணாமலை கடும் கண்டனம் !

Share it if you like it

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநிலத்தை சார்ந்த 30 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலின் உள்ளே சென்று, அவர்கள் கோவிந்தா, சரணம் ஐயப்பா என்றும் கோஷம் எழுப்பியுள்ளனர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சின்னராவ் என்கிற அந்த ஐயப்ப பக்தரை சரமாரியாக ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியுள்ளனர். இதனால் அந்த ஐயப்ப பக்தர் கோவில் கருவறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் கோவில் நடை மூடப்பட்டது. பின்பு பரிகார பூஜை செய்த பின்பு நடை திறக்கப்பட்டது. இதுதொடரான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தமிழக பாஜக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது :-

இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர்.

ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், சன்னதி அருகே அவர்களை 3 செக்யூரிட்டிகள் மற்றும் காவலர் ஒருவர் தாக்கி உள்ளனர். இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது.இந்து சமய அறநிலையத் துறையின் இந்த திமிர் பல காரணங்களில் ஒன்றாகும். தமிழக பாஜக, கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக, இந்து சமயஅறநிலைத்ததுறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர்.

https://x.com/annamalai_k/status/1734458999708459033?s=20


Share it if you like it