300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !

300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் பகுதி அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் பயணித்த ஏராளமான பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 36 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


Share it if you like it