மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் சட்டபேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (07-11-2023) நடைபெற உள்ளது. மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபையில் 20 இடங்களுக்கும் முதல் கட்டமாக நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கர் சட்டபேரவை எதிர்கொள்வதற்காக மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடமிருந்து ஹவாலா பணமாக 508 கோடியை முதல்வர் பூபேஷ் பெகல் பெற்றுள்ளதாகவும், அதிகாரத்தில் இருந்துகொண்டு அவர் செய்த செயல் அவரது அரசை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி குற்றசாட்டை வைத்துள்ளார்.