கொடநாடு விவகாரம் தொடர்பாக, தான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மௌனம் காத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் அதிமுகவை மட்டும் திமுக குறி வைப்பதாகவும், குற்றவாளிகள் அதிமுக ஆட்சியில் ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டதாகவும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கிட உதவிய திமுகவினர் மீது ஏன் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.