பச்சை பொய்யை கூறிவிட்டு பழியை பாரதப் பிரதமர் மீது போட்ட நாடக குயின்..!

பச்சை பொய்யை கூறிவிட்டு பழியை பாரதப் பிரதமர் மீது போட்ட நாடக குயின்..!

Share it if you like it

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், மத்திய அரசு, மோடி, என்றால் மட்டுமே உடனே  கருத்து தெரிவிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் எம்.பியும் மக்கள் உட்பட பலரால் நாடக குயின் என்று அழைக்கப்படுபவருமான ஜோதிமணி பா.ஜ.க மீது தனது கடும் கோவத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

குஜராத்தில் மாபெரும் தலைவர் சர்தார் படேலின் பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு கூச்சமில்லாமல் தன் பெயரை வைத்துக்கொண்டவர் மோடி. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் விளையாட்டு விருது இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அநாகரிக அரசியல் பாஜகவுக்குப் புதிதல்ல.

இந்தியாவில் ஒவ்வொரு மனிதரிடமும் தொலைபேசி/அலைபேசி இருக்கும்வரை,கணிணி இருக்கும் வரை,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு இருக்கும்வரை ,நவீன இந்தியா இருக்கும்வரை ராஜீவின் புகழ் நிலைத்திருக்கும். திரு.மோடியின் அற்ப அரசியலால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

தான் ஒரு எம்.பி என்பதை கூட மறந்து விட்டு பிரதமர் மீது உள்ள வன்மத்தால் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்கள் மத்தியில் நாடக மணி பதிவு செய்து உள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர்.


Share it if you like it