பதவி ஏற்பதற்கு முன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஆளுநர் !

பதவி ஏற்பதற்கு முன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஆளுநர் !

Share it if you like it

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ரகுவர் தாஸ் அவர்களை ஒடிசாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டதை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார்.

இந்நிலையில் ஒடிசாவின் 26 வது ஆளுநராக ரகுவர் தாஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன் தனது குடும்பத்தினருடன் லிங்கராஜ் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். முன்னதாக ஒடிசா ஆளுநராக இருந்த கணேஷி லாலுக்கு பதிலாக ரகுவர் தாஸ் நியமிக்கப்பட்டார்.


Share it if you like it