திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகாமையில் அமைந்துள்ள குண்டூர் பகுதியில்,புறம்போக்கு நிலத்தில் 100 அடி உயரத்தில் திமுக கொடி.கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.மக்களுக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த கொடிக்கம்பம் இருப்பதால் அதை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிட்டார். ஆனால் ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் அதை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் 31 ஆம் தேதிக்குள் கொடிக்கம்பம் அகற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.