ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதமாற்றம் செய்து வருகின்றனர். இதையடுத்து, அப்பெண்களை அவர்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர் என்ற ரீதியில் ’தி கேரள ஸ்டோரி’ எனும் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, ஒருபுறம் பெரும் வரவேற்பும் மறுபுறம் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ’தி கேரள ஸ்டோரி’ உள்ளது. ஆகவே, இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த, வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணையை மேற்கொண்டது. அப்போது, இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, மனுதாரர் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை வழங்கியுள்ளது.