மக்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பியும், கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “ஏற்கெனவே உங்களுக்கு (பாஜக) 330 முதல் 334 மக்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இதனால் தனி மெஜாரிட்டியுடன் அவையில் இருக்கிறீர்கள். இந்த முறை இந்த எண்ணிக்கையானது 400-ஐ தாண்டும்’’ என்றார்.
கார்கேவின் இந்தப் பேச்சால் மக்களவையில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் குலுங்கி குலுங்கி சிரித்தனர். எதிர்க்கட்சியின் தேசியத் தலைவர் ஒருவர், ஆளும்கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பேசியதால் சிரிப்பலை எழுந்தது.