காங்கிரஸ் வேட்பாளரை செருப்பால் அடித்த முதியவர் !

காங்கிரஸ் வேட்பாளரை செருப்பால் அடித்த முதியவர் !

Share it if you like it

ஒரு அரசியல்வாதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய எந்த கல்லையும் விட்டுவிட மாட்டார் என்று அடிக்கடி கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமையான இன்று (நவம்பர் 17) புதிய சட்டசபைக்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கிடையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் தொகுதியின் காங்கிரஸ் பிரதிநிதியான பராஸ் சக்லேச்சா சாலையில் அமைந்துள்ள ஒரு மூடப்பட்ட கடையின் முன்பு அமர்ந்துள்ள, பகிரா பாபாஜி என்கிற முதியவரிடம் புதிய ஒரு ஜோடி காலணிகளை கொடுத்துள்ளார். அதற்கு முதியவர் அந்த காலணிகளை வாங்கிக்கொண்டு அவரையே செருப்பால் அடிக்கிறார். அதையும் மிகவும் விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து வருகிறார் பராஸ் சக்லேச்சா. அந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் காங்கிரஸ் பிரதிநிதியான பராஸ் சக்லேச்சா என்பவர் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/news24tvchannel/status/1725348025940480113?s=20


Share it if you like it