நேற்று சேலத்தில் எம்.எஸ்.எம்.இ புரமோஷன் கவுன்சில் என்கிற நிறுவனம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த கருத்தரங்கில் நடிகை நமீதா கலந்துக்கொண்டார். இந்நிலையில் அந்நிறுவனம் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அரசு முத்திரையை முறைதவறி பயன்படுத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகிகளான முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய விசிட்டிங் கார்டு மற்றும் காரில் அசோக சின்னம் மற்றும் தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.