விழுப்புரம், முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் வினோத். இவர் தனியார் கல்லுாரியில் இளங்கலை படித்து வருகிறார். இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதையறிந்த சிறுமியின் தாய், வினோத்திடம் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வினோத்தை கைது செய்தனர். …