தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை..! 

தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை..! 

Share it if you like it

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சம்பளம் இதுநாள் வரை வழங்கபடாத காரணத்தினால், 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் திடீர் வேலை நிறுத்ததால், குப்பைகள் மலைபோன்று குவிந்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால், நகர்புறத்தில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால். தூய்மை பணியாளர்களின் பிரச்சனைக்கு உரிய முறையில் தீர்வு கண்டு நகரத்தை தூய்மைப்படுத்த தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it