திமுக எனும் கட்சியே இல்லாது போகும் காலம் வெகு தொலைவில் இல்லை – இந்து முன்னணி !

திமுக எனும் கட்சியே இல்லாது போகும் காலம் வெகு தொலைவில் இல்லை – இந்து முன்னணி !

Share it if you like it

இந்து விரோத திமுக ஆட்சி இருக்கும் தைரியத்தில் கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு ஊராட்சியில் நள்ளிரவில் பொக்லைன் மூலம் அரிச்சந்திரன் கோவில் மற்றும் 7 சமாதிகளை இடித்து தரை மட்டமாக்கி உள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

திமுக ஆட்சிக்கு வந்த பின் இந்து கோவில்கள் இடிப்பு, இந்து மத (சனாதன) ஒழிப்பு, இந்து பெண்களை வேசி என இழிவுபடுத்துவது என்பது போன்ற திமுக அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைத்து அரசு இயந்திரமே தொடர்ந்து இந்து விரோத செயல்களை செய்து வருவது யாவரும் அறிந்ததே.!

அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத எண்ணம் கொண்ட கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினர் இந்து கோவில்களின் புனிதம் கெடுக்கும் வகையில் கோவிலில் வைத்து மாமிசம் சாப்பிடுவது, இந்து சாமி விக்கிரகங்களை சேதப்படுத்ததுவது போன்ற சமூகவிரோத செயல்களை செய்த போதும் கூட, கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மனநலம் தவறியவர்கள் என முலாம் பூசி, இந்துக்கள் முகத்தில் கரியை பூசும் இந்து விரோத திமுக ஆட்சி இருக்கும் தைரியத்தில் கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு ஊராட்சியில் நள்ளிரவில் பொக்லைன் மூலம் அரிச்சந்திரன் கோவில் மற்றும் 7 சமாதிகளை இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர்.

தொடரும் இந்து விரோத செயல்கள் மூலம் ஓட்டுப் பிச்சை போட்ட சிறுபான்மையினர் மனதை குளிர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்து விரோத திமுக அரசுக்கு, வரும் தேர்தல்களில் இந்துக்கள் ஓட்டு வங்கி உருவாக்கி திமுக எனும் கட்சியே இல்லாது போகும் சூழலை உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it