மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இரண்டு நாட்களாக பல இடங்களில் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பணிக்கு செல்லக்கூடிய பலரும் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுப்பட்டனர். பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் மூன்று நாட்களாக தேங்கியுள்ளதாகவும், இதுவரை மாநகராட்சியானது வெள்ள நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மறியலில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.