இதை விட கேவலம் திமுக அரசுக்கு வேறு எதுவும் இல்லை – விளாசிய நாராயணன் திருப்பதி !

இதை விட கேவலம் திமுக அரசுக்கு வேறு எதுவும் இல்லை – விளாசிய நாராயணன் திருப்பதி !

Share it if you like it

சென்னை ஆலந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. அதில் ஹோட்டல் முதல் டீக்கடை வரை வட மாநிலத்தவர்கள் அதிகம் உள்ளதாகவும், தமிழக ஆண்கள் டாஸ்மாக்கில் மட்டுமே இருப்பதாகவும் பேசியுள்ள காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டிருப்பதாவது :-

இதை விட கேவலம் தி மு க அரசுக்கு வேறு எதுவும் இல்லை. குடும்பத்தை, குழந்தைகளை கவனிக்கும் வேண்டிய பெண்கள், ஆண்கள் டாஸ்மாக் போதைக்கு அடிமையானதால் பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கும் போக வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்றும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் அனைத்தும் டாஸ்மாக்கினால் வட இந்தியர்களுக்கு சென்று விடுகிறது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடும்பத்தை சீரழித்து, பெண்களை வதைத்து, தமிழர்களின் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டு, பிற மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு செல்வதற்கு காரணம் திராவிட மாடல் அரசு தான் என்பதை தெளிவாக சொல்கிறார் அமைச்சர். இவரை இன்னும் தன் அமைச்சரவையில் வைத்துக்கொண்டுள்ளார் முதலமைச்சர்!

https://x.com/narayanantbjp/status/1767043933086056783?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *