‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ திருக்குறள் இல்லையாம்… கருணாநிதி சொன்னதாம்…!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ திருக்குறள் இல்லையாம்… கருணாநிதி சொன்னதாம்…!

Share it if you like it

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருக்குறள் இல்லை, கருணாநிதி சொன்னது என்று பெண் ஒருவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் மிகவும் அபத்தமாக இருக்கும். அது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது சிரிப்பதா, வேதனைப்படுவதா, ரசிப்பதா என குழப்பமாக இருக்கும். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த வீடியோவை வெளியிட்டிருப்பது ஒரு பெண். அந்த வீடியோவில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருக்குறளை சொல்லும் அப்பெண், அதற்குரிய விளக்கத்தையும் சொல்லி விட்டு, இது கருணாநிதி சொன்னது. இதை சரியாக கடைப்பிடிப்பது தி.மு.க. மட்டுமே என்று கூறுகிறார்.

அதாவது, இது ஒரு திருக்குறள் என்பது அப்பெண்ணுக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பது தெரியவில்லை. ஆனால், இது கருணாநிதி சொன்னது என்பது அழுத்தமாக சொல்லி இருப்பதோடு, இதை தி.மு.க.தான் சரியாக கடைப்பிடிக்கிறது என்று கூறியிருப்பதன் மூலம், அது திருக்குறள் என்பதுகூட அப்பெண்ணுக்கு தெரியவில்லை என்பதுதான். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அப்பெண்ணை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it