மீண்டும் பெட்டியை திறந்த திருமா… இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல..?

மீண்டும் பெட்டியை திறந்த திருமா… இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல..?

Share it if you like it

ஹிந்து தெய்வங்களை மீண்டும் இழிவுப்படுத்தி பேசிய வி.சி.க. தலைவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

விடுதைலச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவரது, பேச்சுக்கள், எழுத்துக்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே அமைந்து இருக்கும். குறிப்பாக, ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதையே தனது நோக்கமாக கொண்டவர். இப்படியாக, இவரது அருவருக்கதக்க பேச்சு தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், வழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி நூலை மேற்கோள் காட்டி ஹிந்து பெண்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி இருந்தார்.

பட்டியல் சமூகத்தின் தலைவனாக தம்மை காட்டிக் கொள்ளும் இவர், அச்சமூகத்திற்கு என்ன செய்து இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதேவேளையில், தம்மை மட்டும் இவர் நன்கு வளப்படுத்தி கொண்டார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராசன் கூறியதாவது; திருமாவளவன் ஒரு தலித் விரோதி, அவர் சொந்த ஜாதிக்கும் துரோகம் செய்வார். பட்டியல் சமூகத்திற்கும் துரோகம் செய்வார். தி.மு.க., கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று இதுவரை அவர் ரூ. 2000 கோடி சொத்து சேர்த்து இருக்கிறார் என பகீர் தகவலை தெரிவித்து இருந்தார்.

படி, முன்னேறு, சாதித்து காட்டு என்று கூறுபவர் உண்மையான தலைவர். அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு, தப்பித்து ஓடு என்று கூறுவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கு முடியும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு சென்று ஹிந்துக்களை திட்டுவது. அதேபோல, காது குத்து, வளைகாப்பு, திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு ஹிந்து தெய்வங்களை திட்டுவதை வாடிக்கையாக கொண்டவர். எதை எங்கு பேச வேண்டும் என்பதை கூட அறியாமல் தானும் குழம்பி தம்மை பின்பற்றுபவர்களையும் குழப்பி, மிகப்பெரிய குழப்பவாதியாக வலம் வர கூடியவர் தான் திருமாவளவன்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சின் மூலம் ஹிந்துக்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினரிடையே மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இனிமேல், தமது வண்டி ஓடாது என்பதை உணர்ந்து விட்ட திருமா, தனக்கு எப்போது எல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் இவர் திறக்கும் பெட்டி தான் ஹிந்து தெய்வங்களை விமர்சனம் செய்வது அதனை மெய்ப்பிக்கும் வகையில், இக்காணொளி அமைந்துள்ளது. அதன் லிங்க் இதோ.


Share it if you like it