பா.ஜ.க.வின் வளர்ச்சி எனக்கு பிடிக்கவில்லை – திருமா அலறல்!

பா.ஜ.க.வின் வளர்ச்சி எனக்கு பிடிக்கவில்லை – திருமா அலறல்!

Share it if you like it

பா.ஜ.க.வின் வளர்ச்சி அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, அந்த கட்சியின் வளர்ச்சியால் தனக்கு தான் மிகப்பெரிய ஆபத்து என்பதை வெளியில் சொல்ல முடியாமல் வி.சி.க. தலைவர் அலறி இருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், பெரும்பாலும் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவதில்லை. அதற்கு, மாறாக பா.ஜ.க.வை குறித்து விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர். தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அக்கட்சியின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இதனை, பொறுத்துக் கொள்ள முடியாமல் திருமாவளவன் தொடர்ந்து அலறி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் பிரபல ஊடகமான தந்தி டிவிக்கு வி.சி.க. தலைவர் பேட்டியளித்தார். அதில், பா.ஜ.க.வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வழக்கம் போல சனாதனம், இந்துத்துவா என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க.வின் வளர்ச்சி அ.தி.மு.க.விற்கு நல்லது அல்ல என்று கூறியிருக்கிறார்.

கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் வி.சி.க.வை முதலில் திருமாவளவன் காப்பாற்ற வேண்டும். அதன்பிறகு, மற்ற கட்சியை விமர்சனம் செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it