அண்ணாமலை கொடுத்த அடி: போக்ஸோ நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்த திருமா!

அண்ணாமலை கொடுத்த அடி: போக்ஸோ நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்த திருமா!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் வி.சி.க. நிர்வாகியின் மீது அக்கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருமா, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார். இவரின், பிரிவினை கருத்திற்கு பொதுமக்கள் உட்பட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, வி.சி.க. தலைவரின் கருத்திற்கு எதிர்வினையாற்றும் விதமாக தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் காணொளி வாயிலாக தனது கோவத்தை வெளியிட்டு இருந்தார். இச்சம்பவம், பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறி இருந்தது.

இதனிடையே, வி.சி.க.வின் லத்தூர் ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர், ராணுவ வீரர் குருமூர்த்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு எனது தலைவரை எப்படி? நீ விமர்சனம் செய்யலாம் ஆபசமாக திட்டியிருந்தார். மேலும், உனது பெற்றோரை கொலை செய்வோம் என்று பகீரங்க மிரட்டல் விடுத்திருந்தான். தம்மை, மிரட்டிய வி.சி.க. நிர்வாகியின் ஆடியோவை ராணுவ வீரர் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வி.சி.க. நிர்வாகிக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இந்திய ராணுவ வீரர் குருமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்த போக்ஸோ நிர்வாகி மணிமாறனை மூன்று மாதம் இடை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார் உள்ளார்.


Share it if you like it