சமூக அமைதியை கெடுக்கும் விதமாக சரவெடி சரண் அவர்களின் பாடல் அமைந்து உள்ளதாக பலர் கருத்து.
பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பால்வாடி படிக்கும் பொழுதே வாங்கி கொடுத்தோம் பூந்திய என்று கானா பாடகர் சரவெடி சரண் அவர்கள் சமீபத்தில் பாடிய பாடலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டலை தூண்டும் விதமாக பாடிய கானா பாடகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் காவல்துறையினர் பாடகரை காவல்நிலையம் அழைத்து சென்று எச்சரிக்கை செய்து விட்டு உடனே விடுதலை செய்த சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.