தினமும் 2,000 பேர் மதம் மாறுகிறார்கள்: இதனை தடுக்க நினைக்கிறது பா.ஜ.க.?! – திருமா கதறல்!

தினமும் 2,000 பேர் மதம் மாறுகிறார்கள்: இதனை தடுக்க நினைக்கிறது பா.ஜ.க.?! – திருமா கதறல்!

Share it if you like it

தினமும் 2,000 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றனர். இதனை, தடுக்க பா.ஜ.க. முயல்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அலறிய காணொளி வைரலாகி வருகிறது.

வி.சி.க. தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை மிக கடுமையாக விமர்சனம் செய்பவர். குறிப்பாக, ஹிந்து தெய்வங்களை ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் திட்ட கூடியவர். வழக்கத்தில், இல்லாத மனுநீதி புத்தகத்தை மேற்கோள் காட்டி ஹிந்து தர்மத்தையும், ஹிந்து பெண்களையும் இழிவாக வசைபாடி இருந்தார். அதேபோல, கோவிலில் இருக்கும் சிற்பங்கள் அனைத்தும் ஆபாசமாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இப்படியாக, இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க. தலைவர் திருமாவளன் பேசிய காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், அவர் கூறியிருப்பதாவது;

பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தினமும் 2000 பேர் கிறிஸ்தவர்களாக மதம் மாறுகிறார்கள். அவர்கள் ஏசப்பா, ஏசப்பா என்று போய் கொண்டே இருக்கிறார்கள். அதில், 10 அல்லது 20 பேரோ இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள். பா.ஜ.க.வின் உண்மையான எதிரி அம்பேத்கார் தான் என வழக்கம் போல பா.ஜ.க.வை அவதூறாக விமர்சனம் செய்து இருக்கிறார். பழங்குடியினத்தில் நிகழும் மதமாற்றத்தை தடுக்கவே, பா.ஜ.க. முர்முவை ஜனாதிபதியாக நியமனம் செய்து உள்ளது என்பது போல அவரது பேச்சு அமைந்துள்ளது. திருமாவின், இந்த பேச்சிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டிக் கொள்பவர் திருமாவளவன். ஆனால், இதே விடியல் ஆட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் அநீதிகள் குறித்து இவர் பேசமாட்டார் என்பது கசப்பான உண்மை. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், மற்றும் தேசத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்களின் பிரிவினை கருத்துக்களை மறைமுகமாக ஆதரிக்க கூடியவர். அதே வேளையில், பாரத தேசத்தை மட்டம் தட்டுவதையே தனது நோக்கமாக கொண்டவர். இப்படியாக, பட்டியல் சமூகத்தையும் குழப்பி, அண்ணல் அம்பேத்காருக்கு இன்று வரை பச்சை துரோகத்தை திருமாவளவன் செய்து வருகிறார் என்பதே பலரின் கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.


Share it if you like it