உயிரற்ற கொடி கம்பத்திற்கு போராட்டத்தை அறிவித்த திருமா? உயிர் பிச்சை கேட்டு கதறிய அமைச்சர் மகளின் காதலனை மறந்தது ஏன்?

உயிரற்ற கொடி கம்பத்திற்கு போராட்டத்தை அறிவித்த திருமா? உயிர் பிச்சை கேட்டு கதறிய அமைச்சர் மகளின் காதலனை மறந்தது ஏன்?

Share it if you like it

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளின் காதலன் தமிழக முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்டு உருக்கமாக பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் சேகர் பாபு தான் காரணம் என்று அக்காணொளியில் அவர் தெரிவித்து இருந்தார்.

இது பெரியார் மண் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுந்தரவள்ளி, வைகோ, திருமா, போன்றவர்கள் தனது உயிருக்கு அஞ்சி காணொளியை வெளியிட்ட நபருக்கு ஆதரவாக இன்று வரை குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் காத்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் மோரூர் பேருந்து நிலையத்தில் விசிக கொடியேற்றத்தில் நிகழ்ந்த சலசலப்பை தொடர்ந்து. அப்பகுதியில் கடும் பதற்றம் உருவாகியது. கூட்டத்தை கலைக்க தமிழக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வி.சி.க தலைவர் திருமாவளவன் தமிழக காவல்துறையை கண்டித்து போராட்டத்தை அறிவித்து உள்ளார்.

உயிரற்ற கொடி கம்பத்திற்கு போராட்டத்தை அறிவித்த திருமா? உயிர் பிச்சை கேட்ட அமைச்சர் மகளின் காதலனுக்கு குரல் கொடுக்காதது ஏன்? அப்பாவி பட்டியல் சமூக மக்களை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்ளும் திருமா போன்றவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it