வி.சி.க.வை நாங்க அடக்க வேண்டி வரும் – இசக்கி ராஜா எச்சரிக்கை!

வி.சி.க.வை நாங்க அடக்க வேண்டி வரும் – இசக்கி ராஜா எச்சரிக்கை!

Share it if you like it

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த வி.சி.க. நிர்வாகிக்கு இசக்கி ராஜா எச்சரிக்கை விடுத்துள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாளவன். இவரது, பேச்சு மற்றும் எழுத்துக்கள் பிரிவினையை தூண்டும் வகையில் இருக்கும். இதுதவிர, ஒரு குறிப்பிட்ட மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்துவதையே தனது நோக்கமாக கொண்டவர். அந்தவகையில், தனிநாடு கேட்டு வி.சி.க. தலைவர் பேசிய காணொளி ஒன்று அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு, இந்திய ராணுவ வீரர் குருமூர்த்தி வி.சி.க. தலைவர் திருமாவளவனை கண்டித்து காணொளி ஒன்றினை வெளியிட்டு அதில் இவ்வாறு கூறியிருந்தார் ;

தமிழ் நாடு கேட்கும் திருமாவளனுக்கு எனது கேள்வி இதுதான். தமிழகத்தில், தனியா நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? உன்னால், ஒரு வார்ட்டினை சொந்தமாக மாற்ற முடியுமா? ஒரு நாடு மாதிரி தமிழகத்தை சொந்தமாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். தனி தமிழ்நாடு வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதற்குதான், நாங்கள் இந்திய ஒருமை பாட்டையும், தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்தோமா. நாட்டை இரண்டாகவும், மூன்றாகவும் பிளக்க தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கதான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறோமே? தவிர நாட்டை பிரித்து பார்க்க அல்ல. உன் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பாய்.

அதன்பிறகு, மாவட்டத்தை பிரித்து கொடு என்று கேட்பாய். என்ன தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளரின் தவறு. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டு பற்றை வளர்க்க போராடி கொண்டு இருக்கும் நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடி பாரு உன் வாயாலேயே வந்த மாதரம் என்று சொல்ல வைப்போம் என்று தெரிவித்து இருந்தார்.

குருமூர்த்தியின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வி.சி.க.வை சேர்ந்த கடலூர் மாவட்டம் லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர், ராணுவ வீரருக்கு போன் செய்து இவ்வாறு மிரட்டியிருக்கிறார் ;

எப்படி திருமாவளவனை இப்படிப் பேசலாம். மரியாதையாக மன்னிப்புக் கேள் என்று கூறுகிறார். அதற்கு, அந்த ராணுவ வீரரோ, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான்காரன் துப்பாக்கியும், பீரங்கியையும் தூக்கிக் காட்டினாலே பயப்படமாட்டோம். நீங்க என்னன்னா போன் போட்டு என்னை மிரட்டுகிறீர்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்கிறார். அதற்கு, வி.சி.க. நிர்வாகி, உங்க அப்பா, அம்மா, தம்பி எல்லாம் இங்கதானே இருக்காங்க. அவங்க உயிரோட இருக்கணுமா வேணாமா என்று மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், இந்திய ராணுவ வீரரை மிரட்டிய வி.சி.க. நிர்வாகிக்கும், அக்கட்சியின் தலைவர் திருமாவிற்கும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் இசக்கி ராஜா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it