ராஜபக்சேவின் காலை நக்கிய திருமாவின் ஆட்கள்: குருமூர்த்தியை மிரட்டுவதா? – பிரபல எழுத்தாளர் ஆவேசம்!

ராஜபக்சேவின் காலை நக்கிய திருமாவின் ஆட்கள்: குருமூர்த்தியை மிரட்டுவதா? – பிரபல எழுத்தாளர் ஆவேசம்!

Share it if you like it

இந்திய ராணுவ வீரர் குருமூர்த்தியை மிரட்டிய வி.சி.க. நிர்வாகிகளுக்கு பிரபல எழுத்தாளர் பிரபாகரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேச கூடியவர். இதனிடையே, சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருமா, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார். இவரின், பிரிவினை கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. வி.சி.க. எம்.பி.யின் பிரிவினை கருத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியது.

இதையடுத்து, வி.சி.க.வை சேர்ந்த குண்டர்கள், குருமூர்த்தியை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், பிரபல எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக தன்மை கொண்ட பிரபாகரன் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் வி.சி.க. நிர்வாகியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த, காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it