படிக்க வைத்தார்… குடிக்க வைத்தார்… படுக்க வைத்தார்… திராவிட மாடல் அரசை மரணபங்கம் செய்த இளம்பெண்!

படிக்க வைத்தார்… குடிக்க வைத்தார்… படுக்க வைத்தார்… திராவிட மாடல் அரசை மரணபங்கம் செய்த இளம்பெண்!

Share it if you like it

திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை தோலுரித்து தொங்க விட்டிருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

தற்போது தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் அரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறிவருகிறார். அதேபோல, ஏதாவது ஒரு திட்டத்தைப் பற்றி பேசினால் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறார். மேலும், திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக நடத்த தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, மாநிலம் முழுவதும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் இதுதான் திராவிட மாடல் என்று சொல்லி, தி.மு.க. ஆட்சியை மரண பங்கம் செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். நிகழ்ச்சி ஒன்றில் பேசும் இளம்பெண் ஒருவர், காமராஜர் சிறுவர்களை பள்ளிக்கு வரவழைத்து படிக்க வைத்தார். அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாநிலம் முழுவதும் சாராயக் கடைகளை திறந்து மக்களை எல்லாம் குடிக்க வைத்தார். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அவரது மகன் ஸ்டாலின், மதுவை தாராள மயமாக்கி, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் குடிக்க வைத்து மட்டையாக்கி படுக்க வைத்து விட்டார் என்று பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, திராவிட மாடல் தி.மு.க. அரசின் அவலத்தை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.


Share it if you like it