திருமாவின் பித்தலாட்டம்… தோலுரித்த பா.ஜ.க.!

திருமாவின் பித்தலாட்டம்… தோலுரித்த பா.ஜ.க.!

Share it if you like it

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் பொய், பித்தலாட்ட வீடியோவை தோலுரித்துக் காட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

திருமாவளவன் குறித்தும், அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ குறித்தும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரிடம் பேசினோம். “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் அரியலூர் மாவட்டம் அங்கனூரைச் சேர்ந்த திருமாவளவன். பிறப்பால் ஹிந்துவான இவர், ஹிந்துக் கோயில்களுக்குச் செல்லும்போது தன்னை ஹிந்துவாக அடையாளம் காட்டிக் கொள்வார். அதேபோல, சர்ச்சுக்கும் செல்லும்போதும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் தன்னை கிறிஸ்தவராகவும், இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தன்னை இஸ்லாமியராகவும் காட்டிக் கொள்வார். அதேபோல, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது, ஒருமுறை தான் ஹிந்து என்றும், இன்னொரு முறை தான் கிறிஸ்தவர் என்றும், மற்றொரு முறை தான் ஒரு இஸ்லாமியர் என்று குழப்பவாதியைப் போல மாற்றி மாற்றி பேசுவார்.

அதேபோல, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் பேசும்போது ஹிந்து கோயில்கள், தெய்வங்கள், ஹிந்துக்கள் குறித்து வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவார். இதனால், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது, அடங்க மறு, அத்துமீறு என்று உயர் ஜாதி பெண்களை குறிப்பிட்டு இவர் பேசியது, பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தேர்தல் சமயத்தில் இவரது கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பல கட்சிகள் மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி பேசினார்.

மேலும், ஏற்கெனவே இதே அமைப்பின் கூட்டத்தில் பேசியபோது, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் என்று பேசி, பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். இதுபோன்று அடிக்கடி இவர் தனது நிறத்தைக் கொள்வார். இதனால், அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது, நெட்டிசன்கள், பொதுமக்கள் விமர்சனத்திலிருந்தும் தப்புவதில்லை. அதேபோல, தமிழகத்தில் இருக்கும்போது பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் பற்றி மிகவும் கீழ்தரமாக விமர்சிப்பார். அதே டெல்லிக்குச் சென்று விட்டால், இருவரையும் பார்த்து பம்முவார். இதுபோன்ற இவரது செயல்பாடுகள் அவரது சமூகத்தினர் மட்டுமல்லாது கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில்தான், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் திருமாவளவன், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரவாதம், மோடியின் குரூரம் குறித்து ஒருவர் பேசுகிறார். 50 பக்க அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். உலகளவில் பயங்கரவாதம் பரவுவதற்கு எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதும், ஆர்.எஸ்.எஸ்.ஸை நாம் எதிர்ப்பது ஏன் என்பதும் புரியுமென நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அந்த வீடியோ அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதும் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினரால் பேசப்பட்டதும் அல்ல என்பதை தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

அக்காணொளியில் பேசுபவர் பீட்டர் ஃப்ரெட்ரிக் என்கிற ஹிந்து மத எதிர்ப்பாளர். பேசியது ஹுஸ்டன் நகர கவுன்சிலில். தவிர, இந்தியாவில் இருக்கும் கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர் இந்த பீட்டர் என்பதை அம்பலப்படுத்தி இருக்கும் பா.ஜ.க.வினர், நீயெல்லாம் முன்னபின்ன அமெரிக்க நாடாளுமன்றத்தை பார்த்திருக்கியா… உன்னால தேர்தல்ல தனியா போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? வாழ்நாள் கைதிகளை வைத்துக் கொண்டு கட்சி நடத்தும் உனக்கு இதெல்லாம் தேவையா? என்று கடுமையான விமர்சித்து வருகின்றனர். போதாக்குறைக்கு நெட்டிசன்களும் சேர்ந்துகொண்டு திருமாவளவனை வச்சு செய்து வருகின்றனர். பதில் சொல்ல முடியாமல் தவித்து வரும் திருமா டீம், ஏன்டா இப்படியொரு பதிவை போட்டோம் என்று வெந்து நொந்து போய் இருக்கிறதாம்” என்றார்.


Share it if you like it