சனாதனத்தை ஒழிக்க வேண்டும் பேசுபவர்கள் நாட்டை துண்டாடப் பார்கிறார்கள்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் பேசுபவர்கள் நாட்டை துண்டாடப் பார்கிறார்கள்!

Share it if you like it

சென்னை அண்ணாநகரில் உள்ள பலிமார் மடத்தில் உடுப்பி ஸ்ரீவித்யாதீச தீர்த்த சுவாமிகளின் 45-வது சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழா நடைபெற்றது. ‘சனாதன உற்சவம்’ என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக இருக்கின்றன. எனவே, சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அது, மண்ணோடும், மக்களோடும் நெருக்கமாக உள்ளது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும் யாரெல்லாம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் எச்சரித்தார்.


Share it if you like it