ரோகித்தை மிரட்டி மாட்டிறைச்சி திணிப்பு…  எமனாக மாறிய மனைவி சோனம், மச்சான் அக்தர் அலி!

ரோகித்தை மிரட்டி மாட்டிறைச்சி திணிப்பு… எமனாக மாறிய மனைவி சோனம், மச்சான் அக்தர் அலி!

Share it if you like it

குஜராத்தை சேர்ந்த இளைஞரை மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என மனைவியும் அவரது சகோதரரும் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து இருக்கின்றனர். இதனால், மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் ரோகித் ராஜ்புட். இவர், தனது அலுவலகத்தில் பணியாற்றிய இஸ்லாமிய பெண்மணி சோனத்தை காதலித்து இருக்கிறார். இதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால், ரோகித் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்த வகையில், தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி சோனத்தை திருமணம் செய்து கொண்டு, தனது மனைவியின் வீட்டிலேயே ரோகித் வசித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தான், ரோகித் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது பெரும் மர்மமாக இருந்து வந்தது. இந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்து இருக்கிறது. அதாவது, ரோகித் ராஜ்புட் தற்கொலை செய்துக் கொள்ளும் முன்பு தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். எனது தற்கொலைக்கு எனது மனைவி மற்றும் அவரது சகோதரர் அக்தர் அலியே காரணம். அவர்கள், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மாட்டிறைச்சியை ஊட்டியதால் நான் இந்த தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறேன் என உருக்கமுடன் குறிப்பிட்டு இருக்கிறார். ரோகித், முகநூலில் பதிவிட்ட விவரம் இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சூரத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், சூரத் உத்னா காவல்துறையினர் சோனம் மற்றும் அக்தர் அலியை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள் என்று சொல்லப்படுகிறது.


Share it if you like it