மூன்று இல்லை ஐந்து – புதிய வீடியோவால் வலுக்கும் எதிர்ப்பு

மூன்று இல்லை ஐந்து – புதிய வீடியோவால் வலுக்கும் எதிர்ப்பு

Share it if you like it

மறைந்த ஜெ.அன்பழகனின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சென்றனர் திடீர் என்று காரில் இருந்து கீழே இறங்கி ஆட்டோவில் பயணித்து ஸ்டண்ட் செய்ய முயன்றுள்ளனர். இந்த மூவரும்.

ஆனால் ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி மூவரும் பயணித்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து. அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மேலும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ஆட்டோவில் பயணித்தது மூன்று நபர்கள் இல்லை ஆட்டோ ஓட்டுனருடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் என்ற உண்மையை அந்த வீடியோ போட்டு உடைத்துள்ளது.


Share it if you like it