பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேலுக்கு 14 ஆண்டு கடுங்காவல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேலுக்கு 14 ஆண்டு கடுங்காவல்!

Share it if you like it

பள்ளியில் படித்த 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேலுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள் சீலன் மகன் தாமஸ் சாமுவேல். 57 வயதாகும் இவர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தமிழ் கிறிஸ்துவ லூத்தரன் சர்ச் (TELC) பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 9 மாணவிகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2022-ம் ஆண்டு தலமை ஆசிரியர் தாமஸ் சாமுவேலை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2022 ஜூன் மாதம் போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் குற்றவாளி என்று அறிவித்ததோடு, அவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்திருக்கிறார்.


Share it if you like it