பா.ஜ.க. நிர்வாகி மீது தி.மு.க.வினர் தாக்குதல்!

பா.ஜ.க. நிர்வாகி மீது தி.மு.க.வினர் தாக்குதல்!

Share it if you like it

பா.ஜ.க. நிர்வாகி மீது தி.மு.க.வினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் ஜனார்தனன். பா.ஜ.க.வின் இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர், பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டி இருக்கிறார். இதற்கு, அப்பகுதி தி.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜனார்தனனோ, தான் அரசியல் கட்சி போஸ்டர் ஒட்டவில்லை என்றும், சுதந்திர தினம் தொடர்பான போஸ்டர்களை மட்டுமே ஒட்டுவதாகவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அப்போது, தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள், மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து ஜனார்தனனை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில், தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் ஜனார்த்தனனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share it if you like it