டீ கப்பில் சிலுவை குறியீடு… மிஷனரிகளின் விஷமத்தனம்… திருப்பதியில் பரபரப்பு!

டீ கப்பில் சிலுவை குறியீடு… மிஷனரிகளின் விஷமத்தனம்… திருப்பதியில் பரபரப்பு!

Share it if you like it

திருப்பதி திருமலையில் சிலுவை படம் பொறிக்கப்பட்ட டீ கப் விற்பனை செய்த கடைக்கு, தேவஸ்தான் விஜிலென்ஸ் அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமலை திருப்பதியில் ஹிந்து மதத்தைத் தவிர வேற்று மத பிரசாரம், வேற்று மத வழிபாடு, வேற்று மத குறியீடுகளுடன் கூடிய பொருட்கள் விற்பனைக்கு தடை ஆகிய கட்டுப்பாடுகள் தீவிர அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள டீக்கடை ஒன்றில், சிலுவை குறியீடுடன் கூடிய டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் அங்கு சென்று அந்த டீக்கடைக்கு சீல் வைத்தனர். மேலும், அந்த டீக் கப்புகள் எப்படி கிடைத்தது என்று விசாரணை மேற்கண்டனர்.

அப்போது, திருப்பதி திருமலையில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் வாங்கியதாக டீக் கடை உரிமையாளர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த மொத்த விற்பனை கடைக்குச் சென்ற தேவஸ்தான சுகாதாரத் துறையினரும், விஜிலன்ஸ் துறையினரும் தீவிர சோதனை செய்தனர். அப்போது, அக்கடையில் சிலுவை குறியீடுடன் கூடிய டீக் கப்புகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அக்கடைக்கும் சீல் வைத்த அதிகாரிகள், விஜிலன்ஸ் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்கும்படி அக்கடையின் உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


Share it if you like it