திமுக அரசின் இயலாமை காரணமாக சிறு, குறு. நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்ட போதிலும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று விமர்ச்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்று, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை மீண்டும் உச்சம்பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எடப்பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.