பாஜக பெண் நிர்வாகியை கொடூரமாக தாக்கிய டிஎம்சி குண்டர்கள் !

பாஜக பெண் நிர்வாகியை கொடூரமாக தாக்கிய டிஎம்சி குண்டர்கள் !

Share it if you like it

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜக தலைவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஸ்பா மகிளா மண்டல் தலைவி சரஸ்வதி சர்க்காரும் மற்றும் அவருடைய பாஜக தொண்டர்களும் தேர்தல் பதாகைகள் மற்றும் பூங்கொத்துகளை வைத்துக்கொண்டிருந்தபோது, ​​அப்போது அங்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூரிய ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் பகுதியில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், சர்க்கார் தலையில் காயம் ஏற்பட்டதால் ரத்தம் கொட்டியது. மற்றொரு காணொளியில், சில ஆண்கள் ஒரு வெறிச்சோடிய சாலையில் குச்சிகளுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது.

இதனை அடுத்து சர்க்கார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பாக சர்க்கார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சனிக்கிழமை இரவு கட்சி பிரச்சாரத்திற்காக பதாகைகளை வைத்திருந்த எங்கள் குழு உறுப்பினர்கள் இருவரை டிஎம்சி குண்டர்கள் கொடூரமாக தாக்கி கொண்டிருந்தனர். அப்போது “நான் அவர்களை மீட்கச் சென்றபோது, ​​என்னையும் கடுமையாக டிஎம்சி குண்டர்கள் தாக்கினர். என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்க்காரிடம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பேசியதாகக் கூறினார்.

டிஎம்சி குண்டாக்களால் (குண்டர்கள்) உடல்ரீதியாக தாக்கப்பட்டு தாக்கப்பட்ட கஸ்பா மண்டலைச் சேர்ந்த எங்கள் துணிச்சலான காரியகர்த்தா (கட்சி ஊழியர்) சரஸ்வதி சர்க்காரிடம் பேசினேன். தெற்கு கொல்கத்தாவில் நடந்த கொடூரம் இது என்றால், சந்தேஷ்காலியின் உச்சகட்டத்தை நினைத்து நான் நடுங்குகிறேன்,” என்று அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் இணைப் பொறுப்பாளருமான அமித் மால்வியா, மேற்கு வங்காளத்தில் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை. நேற்றிரவு, டிஎம்சி குண்டர்கள் பாஜகவின் கஸ்பா மண்டல் தலைவராக (தெற்கு கொல்கத்தாவில்) பணியாற்றும் சரஸ்வதி சர்க்காரை தாக்கியுள்ளனர். வங்காளத்தின் உள்துறை அமைச்சராக மம்தா பானர்ஜியின் மகத்தான தோல்வியால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனில் தலையில் ரத்தம் வழிந்தபடி அமர்ந்திருந்த சர்க்கரின் வீடியோவைப் பகிர்ந்துள்ள மாளவியா, “கொல்கத்தா கூட பாதுகாப்பாக இல்லை என்றால், சந்தேஷ்காலியின் பாதுகாப்புக் கவலையின் தீவிரத்தை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். வங்காள மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி டிஎம்சியின் அட்டூழியத்திற்கு பதிலளிப்பார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, பெண்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை கொல்கத்தா இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், “இதுபோன்ற கொடுமைகளுக்கு மாநில மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று வலியுறுத்தினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *