இது பெரியார் மண் என்று பெருமைக்கு வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம் கிராமம் கிராமமாக கட்சியை வளர்க்கும் வேலையை துவங்கி விட்டார்கள் – அலறிய கனிமொழி ஆதரவாளர்…!

இது பெரியார் மண் என்று பெருமைக்கு வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம் கிராமம் கிராமமாக கட்சியை வளர்க்கும் வேலையை துவங்கி விட்டார்கள் – அலறிய கனிமொழி ஆதரவாளர்…!

Share it if you like it

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று தி.மு.க, வி.சி.க, காங்., கம்யூ., மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முதல் தங்களை நடுநிலையாளர்கள் என்று காட்டி கொள்ளும் பத்திரிக்கையாளர் மணி, தி.மு.க எம்.பி கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர் உட்பட பலர் பா.ஜ.க குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், கடும் விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல். தமிழக பா.ஜ.க பற்றி கேலி கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கனிமொழியின் ஆதரவாளரான சவுக்கு சங்கர் அவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்கிறது என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Share it if you like it