சி.பி.ஐ.க்கான அனுமதி வாபஸ்… பயம் கண்ணில் தெரிகிறது… ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை!

சி.பி.ஐ.க்கான அனுமதி வாபஸ்… பயம் கண்ணில் தெரிகிறது… ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை!

Share it if you like it

தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழங்கி இருந்த அனுமதியை அவசர அவசரமாக நேற்று ரத்து செய்திருக்கும் நிலையில், ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என்று கிண்டல் செய்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறவே, ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்த சென்னை உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி அல்லி, அவரை 28-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேசமயம், செந்தில்பாலாஜிக்கு 3 இடங்களில் அடைப்பு இருப்பதால், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) அளிக்கப்பட்டிருந்த அனுமதியை அவசர அவசரமாக திரும்பப் பெற்றிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. எந்த மாநிலங்களில் விசாரணை நடத்துவதாக இருந்தாலும், அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என்று 1946 டில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1989, 1992-ம் ஆண்டுகளில் இச்சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற ஆணையிடப்பட்டுள்ளது. இனி மத்திய புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற ஆணையை மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலினை சீண்டி இருக்கிறார். அப்பதிவில், “முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக 200 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டார் என்று தமிழக பா.ஜ.க. கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டி இருந்தது. இன்றைக்கு தமிழக அரசின் அனுமதியில்லாமல் சி.பி.ஐ.  விசாரணை நடத்த முடியாது என்று ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைப் பார்க்கும்போது, சி.பி.ஐ. விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என்ற அச்சத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பதைப் போல் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it