மதுரை – மும்பை இடையே நாளை முதல் சுற்றுலா ரயில்

மதுரை – மும்பை இடையே நாளை முதல் சுற்றுலா ரயில்

Share it if you like it

மதுரை-மும்பை இடையே நாளை முதல் சுற்றுலா ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் மக்களின் சுற்றுலா பயணத்திற்கான ‘பாரத் கவுரவ் சுற்றுலா’ ரெயில் நாளை மதுரை – மும்பை இடையே இயக்கப்படுகிறது. நாளை மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி காலை 8.30 மணிக்கு மும்பை சென்றடையும். இதேபோல, மறுமார்க்கமாக அக்டோபர் 4-ம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் அதே ரயில், 7-ம் தேதி இரவு 9.15 மணிக்கு மதுரையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it