திருநெல்வேலி பகுதியில் அமைந்து உள்ள டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் உயிர் இழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் அப்பகுதி மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயிர் இழந்த மாணவர்களின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த மாணவர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.