சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகும் #அழுகியமுட்டை _ கீதாஜீவன் !

சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகும் #அழுகியமுட்டை _ கீதாஜீவன் !

Share it if you like it

நேற்று நேருவின் பிறந்தநாளான குழந்தைகள் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் குழந்தைகள் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இப்பேரணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை குறித்து கேட்ட கேள்விக்கு. நல்ல முட்டையா கெட்ட முட்டையா என்று தெரிந்துகொள்ள முட்டையின் மேல் கருப்பு மை வைத்துள்ளனர். அன்று தார்பாய் இல்லாமல் வண்டி வந்துள்ளது மட்டும் பலத்த மழையினால் முட்டைகள் நனைந்து கருப்பு மை ஊறி உள்ளே இறங்கி விட்டதாக கூறினார்.

அழுகிய முட்டைகளுக்கு இப்படியொரு அறிவுபூர்வமான பதிலை கூறியதால், சமூக வலைத்தளங்களில் அமைச்சர் கீதா ஜீவனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் டிரெண்டிங்கில் #அழுகியமுட்டை _ கீதாஜீவன் என்கிற ஹாஷ்டாக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.


Share it if you like it