செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த அஸ்வினி, கடந்த 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சாப்பிட சென்றபோது அன்னதான விழாவில் புறக்கணிக்கப்பட்டதாக புகார் கூறியதைத் தொடர்ந்து அவர் இணைத்தில் வைரலானார். அவருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சேகர்பாபு அதே கோயிலுக்கு அழைத்துச் சென்று அவருடன் அமர்ந்த உணவு அருந்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்வினி கோரிக்கையை ஏற்று அவரது வீட்டுக்கு சென்று உணவு அருந்தினர்.இதன் மூலம் அஸ்வினி மேலும் பிரபலம டைந்தார். ஆனால் அவர் மீ து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஒருவரை கத்தியால் கிழித்த புகாரில் அஸ்வினியை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.