கட்சியில பதவி கிடைக்கும்ணு நீ கத்துற, கதறுற… தி.மு.க. சரவணனை சல்லி சல்லியாக நொறுக்கிய மூத்த வக்கீல்!

கட்சியில பதவி கிடைக்கும்ணு நீ கத்துற, கதறுற… தி.மு.க. சரவணனை சல்லி சல்லியாக நொறுக்கிய மூத்த வக்கீல்!

Share it if you like it

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி, கட்சியில பதவி கிடைக்கும்ணு நீ கத்துற, கதறுற என்று கூறி, தி.மு.க. வழக்கறிஞர் சரவணனை சல்லி சல்லியாக நொறுக்கி இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாபிக் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதுதான். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியின் நெறியாளராக கார்த்திகைசெல்வன் செயல்பட, தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனகராஜ், மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி, செந்தில்பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவையில் எப்படி அவருக்கு இடம் கொடுத்தார் என்று கூற, இடைமறித்த தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், முட்டாள்தனமாக பேசாதீர்கள் என்று சொல்ல, பதிலுக்கு ஸ்டாலின்தான் இப்படி முட்டாள்தனமாக பேசினார் என்று கூற, மீண்டும் சரவணன் முட்டாள்தனமாக பேசாதே என்று ஏகவசனத்தில் பேசியதோடு, யோவ் வாயை மூடுய்யா என்று ஏகவசனத்தில் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, நீ கட்சியில பதவி கிடைக்கும்கிறதுக்காக கத்துற என்று ஒரே போடாகப் போட்டு, சரவணனின் இமேஜை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it